Home / History
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் கல்விக்கழகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் தொண்டும் .
Jan 19231923-ம் ஆண்டு ஜூன் திங்களில் சுமார் 150 மாணவர்களுடன் 5 ஆசிரியர்களுடனும் கலாசாலை என்ற தமிழ்ப் பள்ளி பாடுவார் முத்தப்ப செட்டியார் மடத்தில் தொடங்கப் பெற்றது . முதல் தலைமை ஆசிரியராக யாழ்ப்பாணம் திரு வ.மு. இரத்னேசுவர அய்யர் அவர்கள் பணியாற்றினார்கள் . தமிழறிஞ்சர் திரு அ.மு. சரவணா முதலியார் போன்றவர்களின் அரிய சேவையாலும் இப்பள்ளி சிறந்து விளங்கியது .
Jun 19231928-ல் இத்தமிழ்ப் பள்ளி அரசின் அங்கீகாரம் பெற்ற உயர் துவக்கப் பள்ளியாக மாற்றப் பெற்றது . திரு சங்கர நாராயணன் என்பர் முதல் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் . அதன் பின்னர் திருவாளர்கள் R. சுப்ரமணிய அய்யரும் வெங்கட்ராம அய்யரும் சீனிவாச அய்யரும் கண்ணும் கருத்துமாய் இப்பள்ளியை நடத்தி வந்தனர் . 1942-ம் ஆண்டு இப்பள்ளி நிரந்தர அங்கீகாரம் பெற்றது 1949. ல் உயர்நிலைப் பள்ளி தோன்றியது . தொடங்கப் பள்ளி உயர் துவக்க பள்ளியாக மாற்றப்பெற்றது . Jun 1928
1949-ம் ஆண்டு ஜூலை முதல் நாள் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் உயர்நிலைப் பள்ளி தொடங்கப் பெற்றது. முதல் தலைமை ஆசிரியராக S. இராகவாச்சாரி பணியாற்றி வந்தார். அதன் பின்னர் திரு V. கோபால கிருட்டிண அய்யர் திரு உ. சிவராமபிள்ளை ஆகிய இருவரும் இப்பள்ளியை நடத்தி வந்தனர்
Jul 79491981-ம் ஆண்டு ஜூலை 15-ம் நாள் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப் பெற்றது. 1981-ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் செட்டிநாட்டரசர் இராஜா சர்.M.A முத்தையா செட்டியார் அவர்கள். அப்போதைய கல்வி இயக்குனர் டாக்டர் திரு K. வெங்கடசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் மேல்நிலைப்பள்ளி படிப்பு துறையினை தொடக்கி வைத்தார்கள்
Jul 1981அருள்மிகு மீனாட்சி கலாசாலை கட்டிடம் 1 1/4 ஏக்கர் இடத்தில் கட்டப் பெற்றது . 4-9-1925 ல் திரு க.தெ.நா தேனப்ப செட்டியார் அவர்களால் திறந்து வைக்கப்பெற்றது.
Sep 19251950-ல் உயர்நிலைப் பள்ளியானது திரு எ.நா. காசிவிஸ்வநாத செட்டியார் அவர்கள் முன்னிலையில் கட்டிடத்தின் பின்புறம் வகுப்பறைகள் சேர்க்கப்பெற்று திறந்து வைக்கப்பெற்றது .
Jun 19501950-ல் ஐந்து வகுப்பறைகள் உயர்நிலைப் பள்ளியுடன் இணைக்கப் பட்டது . அப்போதைய முதலைச்சர் மாண்பு மிகு திரு கே. காமராஜ் அய்யா அவர்களால் திறந்து வைக்கப் பெற்றது . Jun 1950
1950-ல் 5 ஏக்கர் அளவில் பள்ளிக்கு விளையாட்டு திடல் வாங்கப் பெற்றது . பின்பு அவற்றில் மேல்நிலைப் பள்ளி அமைக்கப் பெற்றது .
Jun 1950This is the content of the last section
Feb 2020